என் உயிர் நீ
என்னவனே நீ என்
கண்ணாக இருக்காதே!
கண் இல்லாமல் உன்
பார்வையில் என்னால்
வாழ முடியும்-ஆனால் நீ
என் சுவாசம் -நீ
இல்லாமல்(சுவாசம்)என்னால்
வாழ முடியாது.
நம் திருமணத்திற்கு பிறகு
எனக்கு தனிகாலடி சுவடே
இல்லை ஏன்என்றால்-நான்
உன்னுள் இருக்கும்போது
என் காலடி சுவடு
எப்படி தெரியும்.
நாம் சந்தோஷமாக
இருக்கையில் என்
அருகாமையிலே இருக்கிறாய்
நம் பிரிவின்போது-என்னுள்ளேயே
இருந்து என்னை மகிழ்விக்கிறாய்.
நமக்கு இருகுழந்தைகள் என்றேன்
ஆனால் நீயோ இல்லை-எனக்கு
உன்னுடன் சேர்த்து மூன்று
குழந்தைகள் என்று கூறி
எனக்கு தாயுமானவானாய் ஆனாய்.
நாம் நடந்து வந்தபாதையில்
எவ்வளவோ கஷ்டத்தை கண்டோம்
உன் கைபிடித்ததனால் அத்தனையும்
எனக்கு கஷ்டமாக தெரியவில்லை
நம்திருமணத்திற்கு பிறகு-நான்
அழுததே இல்லை-ஏனெனில்
அழுகை என்ற வார்த்தையே
மறக்கவைத்தவன் நீ.
எல்லா ஆணின் வெற்றிக்கு பின்னால்
ஒரு பெண் இருப்பாள் என்பது
உலக நடைமுறை சொல்-என்
சாதனைக்கு பின்னால்-நீ
என்று பெருமையுடன் கூறுவேன்.
கடவுளிடம் ஒருவரம் கேட்பேன்-என்
சாவில் கூடநான் உன்னை விட்டு
பிரியகூடாது-ஏன்னென்றால் சாவில்கூட
உன்னைவிட்டு என்னால் பிரியமுடியாது.

Really is beautiful poem. And really touch my heart.
ReplyDelete